Thursday, May 14, 2009

அரச கட்டுபாட்டில் வரும் மக்களின் நிலை




விமல்காந்த்




பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை


பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்


சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.


Monday, May 11, 2009

அனைத்துலக சமூகம் தவறிவிட்டதால் 10 ஆயிரம் பேர் 5 மாதத்தில் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றச்சாட்டு


விமல்காந்த், சென்னை.


வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தவறிவிட்டதால் கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் காயமடைந்தும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கள அலுவலக தலைமை அதிகாரி லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துமாறும் கோரியிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சுமார் 1,30,000 மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியான வான் குண்டுத்தாக்குதலையும் பலமான எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள். நாள் முழுவதும் தொடர்ந்த இந்தத் தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.
கனரக ஆயுதப் பாவனை இரண்டு வார காலத்துக்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போதிலும், நேற்றும் தொடர்ச்சியாக இந்த வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தடைகளால் இப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகளோ, மருந்துகளோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ இல்லாமையால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஊடகங்களில் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமானவர்களே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தற்காலிக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக களப் பணியாளர்களின் தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், தாக்குதலின் போது கொல்லப்பட்ட பலர் கடற்கரை மணலால் மூடப்பட்டுவிட்டனர்.
பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. உடனடியாக இந்தப் பகுதிக்கு உணவு மற்றும் மருந்துகளை அனுப்பிவைக்குமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளையில், இப்பகுதியில் பாரியளவிலான படுகொகைள் இடம்பெறுவதால் அனைத்துலக சமூகம் கண்காணிப்புக் குழு ஒன்றையும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த இனப்படுகொலையைத் தடுப்பதற்கு உலகம் உடனடியாகத் தலையிட வேண்டும்" என லோறன்ஸ் கிறிஸ்ரி அனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளையில், நேற்று இடம்பெற்ற மூர்க்கத்தனமான தாக்குதல்களில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 24 மணிநேரம் கடந்த நிலையில் கூட சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.
பெரும் தொகையான காயமடைந்தவர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் மருத்துவப் பணியாளர்கள் பலர் பணிக்கு வராமையாலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மருத்துவப் பணியாளர்களில் குடியிருப்புக்கள் பல தாக்குதலுக்குள்ளாகியிருப்பதால் அவர்களில் 50 வீதமானவர்கள் கடமைக்குச் சமூகமளிக்க முடியாத நிலையிலிருப்பதாகவும் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

India gave military help to fight LTTE- Ranil


விமல்காந்த். சென்னை


Sri Lanka's former Prime Minister Ranil Wickremesinghe speaking exclusively to 'Times Now' said that India has actively helped the Sri Lankan army in its fight against the LTTE. In the interview Wickremesinghe admits India has played a key role in decimating the LTTE from its strongholds.
Wickremesinghe commenting on the role of India and western countries in the fight against the LTTE said: In the security sphere India and the developed countries gave us assistance from the time I was Prime Minister. Earlier there were embargoes, but with the peace process they agreed to come in with security co-operation. For instance, the interdiction of LTTE ships on the sea would not have been possible without the help of India, US and some other countries. The LTTE network abroad was also broken up. Speaking on other countries helping in trading, intelligence co-operation with the Sri Lankan armed forces, he said, That is also on. We arranged it and also got it expanded. There has been training. There has been intelligence co-operation, exchange of views and India also provided a raid of our defence in Sri Lanka. This revelation by Wickremesinghe is bound to embarrass the UPA government and its ally DMK Karunanidhi who are battling hard against the state wide protest on UPA government for supporting the war on Tamils. Many pro Eelam Tamil groups and film personalities have vowed to root congress from Tamil Nadu with this election.


Sunday, May 10, 2009

இன படுகொலை..... சில படங்களே இணைக்கப்பட்டு உள்ளது














































விமல்காந்த், சென்னை.


















இன படுகொலை . நெஞ்சில் இடி விழுகிறது.

Friday, May 8, 2009

Sri Lanka : A Paradise turned into Kingdom of Vultures!

Vimalkanth

Srilanka is the place were the ethnic conflict is going in the name of war on terror. A perfect Genocide is happening, were 7 crore tamils are living nearly 40 km away from Tamilnadu. Here british leading news magazine reveals the truth in the island.

Pls click the link to read the article.

http://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures

Wednesday, May 6, 2009

34வது ஆண்டில் நுழையும் விடுதலை புலிகள் இயக்கம்


Vimalkanth


இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய சிக்கலுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துடன் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள்.கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை.1972ம் ஆண்டு தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அது.1975ம் ஆண்டு யாழ்ப்பாணம் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவை நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொன்றார் பிரபாகரன். இதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல் கொலை.பொன்னாலையில் உள்ள இந்துக் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக் கொன்றார்.யாழ் வளைகுடாவில் எழுந்த தமிழ் தேசிய உணர்வுகளை முறியடிக்க முயன்றார், சிங்கள கட்சியான இலங்கை சுதந்திரா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.அதன் பின்னர் விடுதலைப் புலிகள் வேகமாக வளர ஆரம்பித்தனர். 1976ம் ஆண்டு மே 5ம் தேதி தனது அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) என மாற்றினார் பிரபாகரன்.1976ம் ஆண்டு தொடங்கிய புலிகளின் வேக நடை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது. மிகப் பெரிய போராளி இயக்கமாக மாறியது. தங்களது கொரில்லா முறைத் தாக்குதலால் இலங்கைப் படைகளையும், அரசையும் திணறடித்து, சிதறடித்தனர் புலிகள்.இலங்கை அரசியல் தலைவர்கள் கொழும்பை விட்டு வெளியேறவே முடியாத அளவுக்கு நிலைமை போனது.புலிகளுக்கு கடந்த காலங்களில் இந்திய அரசில் பங்கேற்று வந்த பல்வேறு தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். நிதியுதவியும், ஆயுத உதவிகளும், பயிற்சி உதவிகளும் புலிகளுக்குத் தாராளமாக கிடைத்தன. ஏராளமான வெளிநாடுகளிலிருந்தும் புலிகளுக்கு நிதியும், ஆயுதமும், பயிற்சிகளும் தடையின்றி கிடைத்தன.புலிகளின் சர்வதேசப் பிரிவு அலுவலகங்கள் லண்டன், பாரீஸில் இருந்தன.விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேருபவர்களுக்கு மிகக் கடுமையான ராணுவப் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்த ராணுவ வீரருக்குரிய தரமான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.பயிற்சி முடித்து வெளியே வரும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் கையில் சயனைடு குப்பி தரப்படும். அதை கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். எதிரிகளிடம் சிக்கினால் உடனடியாக குப்பியைக் கடித்து உயிர் துறப்பார்கள் புலிகள்.விடுதலைப் புலிகளிடம் சகலவிதமான ஆயுதங்களும் இருந்தன. பீரங்கிப் படை, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் என பக்கா ராணுவ பலத்துடன் திகழ்ந்தார்கள் புலிகள்.ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் தவிர வேறு சில போராளி அமைப்புகளும் இருந்தன. தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (டெலோ), ஈழம் புரட்சிகர மாணவர் கழகம் (ஈராஸ்), தமிழ் ஈழ மக்கள்புரட்சி முன்னணி (இபிஆர்எல்எப்) ஆகிய அந்த அமைப்புகளுடன் இணைந்து 1984ம் ஆண்டு பிரபாகரன், ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.இதில் டெலோ இந்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டது. இந்தியாவின் முயற்சியால் இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அரசுக்கு சாதகமாக டெலோ நடந்து கொண்டது. இது பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை.இதையடுத்து 1986ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார் பிரபாகரன். மேலும், பிற போராளி அமைப்புகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைய வேண்டும் என உத்தரவிட்டார். இதை ஏற்காமல் டெலோ இயக்கத்தினர் விடுதலைப் புலிகளுடன் மோதினர். இந்த மோதலில் விடுதலைப் புலிகள் வென்றனர். டெலோ இயக்கம் அழிக்கப்பட்டது. அதில் இருந்த வீரர்கள் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர்.அதேபோல பிற இயக்கங்களும் கூட அழிக்கப்பட்டு விட்டன. இறுதியில் தனிப் பெரும் இயக்கமாக மாறியது விடுதலைப் புலிகள் இயக்கம். யாழ் குடா முழுவதும் புலிகள் வசம் வந்தது.1987ம் ஆண்டு கரும்புலிகள் எனப்படும் தற்கொலைப் படைப் பிரிவை உருவாக்கினார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதல் உலக அளவில் பயங்கரமானது. இந்த அமைப்பின் முதல் தாக்குதலில் இலங்கை ராணுவ முகாம் ஒன்று தகர்க்கப்பட்டு 40 வீரர்கள் பலியானார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல் நுட்பத்தை தெரிந்து கொண்டுதான், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கமும் இதேபோன்ற தாக்குதலில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக வளர்ந்து வந்த விடுதலைப் புலிகள், இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சோதனைக்கு மத்தியில் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இதுவரை வைத்திருந்த மிகப் பெரிய பரப்பளவு பூமியை அவர்கள் இழந்து நிற்கின்றனர். வெறும் 4 சதுர கிலோமீட்டருக்குள் புலிகள் இன்று முடக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும், ராணுவத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த பிரபாகரன் இன்று மிகக் குறுகிய இடத்திற்குள் முடக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் கூட இலங்கை ராணுவமும், அந்நாட்டு அதிகாரிகளும், அமைச்சர்களும் கூறுவதைப் போல இப்போதும் கூட விடுதலைப் புலிகள் தைரியமாக போரிட்டு வருகின்றனர். அவர்களிடம் உறுதித் தன்மை இருக்கிறது, ஆயுதங்களும் கை நிறைய இருக்கிறது என்பதில் உண்மை உள்ளது.மிகச் சிறிய பரப்பளவுக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் கூட, அந்த இடத்திற்குள் கூட இலங்கை ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியாத அளவுக்கு புலிகளின் எதிர்த் தாக்குதல் வேகமாகவே இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.புலிகளால் இனியும் பாரம்பரிய சண்டையில் ஈடுபட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களின் ஸ்பெஷல் தாக்குதல் ஆயுதமான கொரில்லா போர் முறையில் இன்னும் அவர்கள் வீழவில்லை. எனவே கொரில்லா போர் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது.தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரபாகரனும், அவரது தளபதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறிய இடத்தைப் பிடிக்க ராணுவம் நிதானமாக முன்னேறி வருகிறது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதால் தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் இலங்கை நிதானிக்கிறது.இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான நாசகார ஆயுதங்களை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களையே அழித்து விடும் திட்டத்திலும் இலங்கை அரசு உள்ளது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், குறிப்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை இருப்பதால் நிதானம் காக்குமாறு இலங்கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது இந்தியா. ஆனால் மே 13ம் தேதிக்குப் பிறகும் கூட இலங்கையை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்

தமிழ்நாட்டு மக்கள் மே 13 இல் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள்: நடேசன் வலுவான நம்பிக்கை


Vimalkanth.

தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

தற்போதைய நிலமை தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

உலகின் சில பெரிய சக்திகளின் துணையுடன் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயல்வது, இந்தத் தீவில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்தாது. எமது மக்களின் உரிமைகள் பெறப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.

இப்போது - தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் விரைவுபடுத்தப்பட்ட இன அழிப்பு போருக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற்றி வருவதன் தொடர்ச்சியே இது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சுகவீனம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என வெளியாகும் தகவல்கள் உண்மையா?

இன்றைய போரானது பல மட்டங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழீழ மக்களின் மனிதாபிமான அவலங்களுக்கு இந்திய மக்களிடத்தில் இருக்கும் ஆதரவை மழுங்கடிக்கும் செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. களமுனை தகவல்களை பொறுத்தவரையில் கூட, இராணுவத்தால் பரப்பப்படும் வதந்திகளுக்கு சில ஊடகங்கள் நம்பகத்தன்மையை ஊட்ட முனைகின்றன.

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?

வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் - ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் - இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவுசெய்யும் ஒரு மாற்றத்தை இந்த தேர்தல் கொண்டுவரும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை.

தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது, ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான். ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் - தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான உங்களின் பார்வை என்ன?

ஏப்ரல் 27 ஆம் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை சிறிலங்கா இராணுவம் 5,000-க்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகளை மக்கள் வாழும் 'பாதுகாப்பு வலய' பகுதி மீது வீசித் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆகவே, இது தொடர்பில் நான் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை.

தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

Sunday, May 3, 2009

சிறிலங்கா பாரிய அழிப்புத் தாக்குதலுக்கு தயாராகின்றது - இரசாயணத் தாக்குதலுக்கு முன்னேற்பாடு


Vimalkanth


கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன.

கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாக தமிழ் மக்கள் மீது இரசாயணத் தாக்குதல்களை சிறிலங்கா நடத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.

இதேவேளை, தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை எனக் கூறிவரும் சிறிலங்கா, தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பகுதியில் செயற்பட்ட மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு சிகிச்சைபெற்று வந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்திருந்தவர்கள் உட்பட 87 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், மீண்டும் பாரிய இராணுவ நகர்வொன்றை மேற்கொள்வதற்கு தயாராகியுள்ள சிறிலங்கா இராணுவம், இம்முறை பெரும் அழிவை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இரசாயண ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது. அவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தஞ்சமடைந்துள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வரையான மக்கள் பெரும் அழிவொன்றினை சந்திக்க நேரிடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக அறிவித்த போர் நிறுத்தத்தை நிராகரித்த சிறிலங்கா, சர்வதேச நாடுகள் விடுத்த வேண்டுகோள்களையும் நிராகரித்து பெரும் அழிப்புத் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 2, 2009

மனித உயிர்களைக் காக்க 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று போரை நிறுத்துங்கள்: உலக சமூகத்திடம் பா.நடேசன் வேண்டுகோள்


Vimalkanth
"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான 'அசோசியட் பிறஸ்' நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது:

"நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால், அனைத்துலக சமூகம் இந்த கொடுமையான போரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போடும் இராஜதந்திர அழுத்தங்களை எல்லாம் சிறிலங்கா அரசு புறம் தள்ளிவருகின்றது.

"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்தார்.

மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் நடேசனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரியிருந்தது.

இதற்கு பதிலளித்த நடேசன், "சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை. எமது (மக்களின்) நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்த நடேசன், "நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள் யாராவது தமது குடும்ப உறுப்பினர்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவார்களா?" என கேள்வியும் எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினர் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கருத்துக்களை மறுத்த நடேசன், தாம் எல்லோரும் நாட்டிலேயே இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது சிறிலங்கா அரசின் பகுதியில் உள்ள தயா மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, அந்த கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் தமது இயக்கத்தின் "முக்கியமான ஒரு உறுப்பினர் அல்ல" எனவும் நடேசன் தெரிவித்தார்.

கொழும்புக்கு செல்லவிருந்த இந்திய இராணுவ ஆயுத லாரிகளில் 5 லாரிகள் தமிழர்களால் சேதம்



Vimalkanth

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

DEFEAT CONGRESS AND DMK


Vimalkanth

Thursday, April 30, 2009

1,500 பேர் கொல்லப்பட்டதால் கொசோவா தனிநாடு; 3 மாதத்தில் 7,000 பேர் கொல்லப்பட்டும் தமிழருக்கு முடிவு என்ன?" மிலிபான்டிடம் த.தே.கூ. கேள்வி


Vimalkanth

1,500 மக்கள் கொல்லப்பட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக சமூகம், இப்போது வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது ஏன்?" என்று கொழும்பு சென்ற பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கின்றது.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி முகாமில் இருந்து சுமார் 300-க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா படையினரால் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் பெற்றோர்களுக்கு தெரியாது என்றும் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.

பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் டேவிட் மிலிபான்ட், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடினர்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணிநேரமாக இடம்பெற்றது.

1,500 மக்கள் கொல்லப்ட்டமைக்காக கொசோவாவை தனிநாடாக்கிய அனைத்துலக நாடுகள் இன்று வன்னியில் மூன்று மாதங்களில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் கைகட்டி பார்த்து நிற்பது வேதனை அளிக்கின்றது என சுட்டிக்காட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை பார்வையிட்ட உங்களால் உண்மை நிலைமைகளை அறிந்திருக்க முடியாது.

ஏனெனில் மொழிபெயர்ப்பாளர்கள் கூட அரசாங்கத்தின் பிரதிநிதிகள்தான். அரசாங்கம் உங்களுக்கு கடிவாளம் இட்ட நிலையில் மக்களின் அவல நிலைமைகளை காண்பித்திருக்கின்றது. அது ஏற்புடையதல்ல என்றும் வலியுறுத்தி கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சொன்னார்.

30 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஏமாற்றி தற்போது அனைத்துலக நாடுகளை ஏமாற்றி வருகின்றது சிறிலங்கா அரசாங்கம்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு சரத்துகளில் கையொப்பம் இட்டு இன்று அவற்றை எல்லாம் மீறியுள்ளது.

மனித உரிமைகளை பாதுகாப்பது பற்றிய ஜெனீவா தீர்மானங்களுக்கு அமைவான ஒப்பந்தங்களில் கைசாத்திட்ட விடயங்கள் எல்லாவற்றையும் மீறி சிறிலங்கா அரசாங்கம் தமிழர்களை கொலை செய்து வருகின்றது என விளக்கி கூறியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கனரக அயுதங்களை பாவிக்க மாட்டோம் என்று இந்தியாவுக்கு கொடுத்த வாக்குறுதிகள் கூட மீறப்பட்டு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தங்கியுள்ள மக்களின் வாழ்விடங்கள் மீது கனரக ஆயுதங்களினால் சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்நிலையில் சிறிலங்கா அரசாங்கத்தை அனைத்துலகம் எப்படி நம்புகின்றது? தமிழர்கள் என்ன செய்வது? என்று பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட்டிடம் கேள்ளி எழுப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

அதேவேளையில் பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் தனியான நிர்வாகம் ஒன்றின் கீழ் இருந்த தமிழர்களை 1948 இல் சிங்கள தேசியத்தின் அரசியல் யாப்புக்குள் இணைத்துவிட்ட குற்றம் பிரித்தானியாவுக்கே உரியது.

அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை நிவர்த்திக்க தற்போதைய பிரித்தானிய ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரிவாக கூறினார்.

இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் நிலைமைகளை நேரில் அறிவதற்கே கொழும்புக்கு வந்ததாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் சொன்னார்.

Wednesday, April 29, 2009

Vaiko urges Obama for resolve the tamils issue


Vimalkanth

The MDMK leader Vaiko urges the American President Obama to resolve the tamils issue and stop the ongoing Genocide in the lankan island. In his e mail he briefly stated that the Rajapakse Government is cheating the whole world and doing the genocied outrightly. Obama is the only hope for the thousands of years old tamil origin.

இலங்கை இராணுவத்தினரிடம் தஞ்சம் புகுந்த வன்னி மக்களின் அவலநிலை






Vimalkanth

வன்னியில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் யுத்தம் காரணமாக பல்லாயிரக்கான வன்னி மக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சம் அடைந்து அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்றார்கள்
இவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு சென்ற இராணுவதினர் ஒலிபெருக்கி மூலம் உங்கள் பிள்ளைகள் ஒருநாள் விடுதலை புலிகளின் அமைப்பில் இருந்தாலும் தயவு செய்து முன்னரே பதிவு செய்து கொள்ளுங்கள்

உங்கள் பிள்ளைகளுக்கு எங்களால் எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது உங்கள் பிள்ளைகள் உங்களிடமிருந்து பிரிக்கமாட்டோம் பதிவு செய்யாமல் உங்களின் பிள்ளைகள் யாராவது விடுதலை புலிகளின் அமைப்பிலிருந்த்தாக எங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார்க்ள்

இதை நம்பிய பொற்றோர் தங்களின் பிள்ளைகளை பதிவு செய்தார்கள் பதிவு செய்த பின் பிள்ளகளை பெற்றொருடன் விட்டுச்சென்ற இராணுவதினர் மறுநாள் காலை ஒரேநேரத்தில் அனைத்து முகாமுகளுக்கும் சென்ற இராணுவத்தினர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் என பதிவு செய்த ஆண்கள் பெண்கள் என 400ற்கும் மேற்பட்டவர்களை பலவந்தமாக ஏற்றி சென்றுள்ளனர்

இவர்களின் நிலை என்ன என்று தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்றார்கள்

Tuesday, April 28, 2009

கடந்த 15 மணி நேரத்தில் 272-க்கும் அதிகமானோர் பலி! 1400-க்கும் அதிகமானோர் காயம்!

Vimalkanth

வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது கடந்த 15 மணி நேரத்தில் 5,600 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இன்றைய எறிகணைத் தாக்குதல்களில் 200-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1400-க்கும் அதிகமான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர்

மக்கள் இடம்பெயர்ந்து வாழும் நெருக்கமான பிரதேசங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11:00 மணி வரை 2,000 பல்குழல் வெடிகணைகள், 1,000 ஆட்டிலறி எறிகணைகள், 2,000 மோட்டார் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஒற்றைப் பனையடி, இரட்டைவாய்க்கால் ஆகிய பிதேசங்களில் வாழும் மக்களை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.



சிறீலங்காப் படையினரின் அகோர தாக்குதல்களால் மக்கள் குடியிருப்புகள் எல்லாம் புகை மண்டலமாகவும், தரப்பாள்கள் எரிந்தும் நாசமாகியுள்ளன. பொதுமக்களின் உடலங்கள் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன



வலைஞர்மடத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் படையினரின் அகோர தாக்குதல்களால் வட்டுவாகல் பகுதிக்கு இடமபெயர்ந்துள்ளனர்.

Canada protest

Vimalkanth,




A SMS brings 10000 thousand people in road after the message received from the political wing of Ltte Thiru.Nadesan. In his message there is a slaughter is going to happen in so called safe zone, and he urges the tamils in world to protest in roads until the world nations assures the safety of the civilians in eelam.

Monday, April 27, 2009

No Cease fire

Vimalkanth, Chennai.

Indian and Tamil nadu Government makes the people in tamil nadu fools. As the sonia government is conducting the ongoing war in eelam, their govt foreign minister seeks a pause on the ongoing war for civilians. But they never asks ceasefire nor they will. The chief minister of tamil nadu plays a drama to fool the tamils in the world. Again by afternoon he was digested with the food eaten early morning and he gone for lunch declaring the lankan government heeds his fast and makes ceasefire.

Today the kfir figther jets unloaded several bombs in the so called safe zone.
Almost 287 killed and morethan 500 severly injured by losing their limbs. All of them are small children under the age of 15.

Are we tamils in the world are fool enough to listen these political jokers. We are not idots. we will show the power of tamils in the forthcoming elections.

Sunday, April 26, 2009

Prabhakaran still has enough grit to continue the fight


Article by Anitha Pratap. The Week.

LTTE leader Velupillai Prabhakaran is many things to many people-national leader, freedom fighter, revolutionary, guerrilla, killer, saviour, tyrant, visionary and terrorist. Lionised or demonised, depending on their standpoint.
I cannot know what is going on in Prabhakaran's head, but I am certain he is neither frightened nor desperate. He is not afraid of death. He has been courting it since he was 17. He is an indefatigable warrior, one who is philosophically detached from all things tactical. Yet, paradoxically, in achieving his strategic goal of Tamil Eelam, he displays an unwavering attachment.

I doubt whether these military setbacks will discourage, undermine or erode his confidence or commitment to his goal. He is very clear in his mind-he is fighting to liberate his people. For that principle he lives. For that principle he fights. And for that principle he is willing to die. Victories and defeats come and go. Territories are lost and won. Cadres die, comrades betray. But to his dying breath, he will remain true to Eelam.
In the 30 years that I have written about this conflict, never has the LTTE been so alone and friendless in its struggle. Prabhakaran is a victim of a combination of his actions and international circumstances. By assassinating Rajiv Gandhi, he made an implacable foe of India. And after 9/11, George Bush's war on terror created zero tolerance for terrorism around the world. It also blurred distinctions between terrorist organisations and national liberation groups.

There is no liberation army in the world that has not faced state terror and in turn used terror as a tactic to pursue its nationalist goals. Netaji Subhas Chandra Bose and Bhagat Singh-Prabhakaran considers them heroes-were designated terrorists by the British rulers of India. Until recently, Nelson Mandela was on the list of terrorists.

The LTTE is banned as a terrorist organisation in some 30 countries. That has given the Sri Lankan government global sanction to destroy the LTTE. But in doing so, the international community has allowed a disaster of epic proportion to unfold. This is not an LTTE, but a Tamil tragedy. Nowhere in the world has a government been continuously bombing its own civilians for over a year. This is a crime Israeli, American and NATO forces are not guilty of.

A designated No Fire Zone has turned into a vast death chamber for Tamil civilians, trapped between the LTTE and the attacking army. Nowhere else in the world is a war being waged without outsiders and independent witnesses, not in Iraq, not in Afghanistan, not in Gaza. But in Sri Lanka, the media and NGOs have been banned from the war zone, and the International Committee of the Red Cross, among the lone relief workers there, has described the civilian situation as catastrophic. A quarter of a million Tamils uprooted. Tens of thousands imprisoned in refugee camps. Thousands killed and maimed.

Those who say the Tamils deserve this fate because they supported Prabhakaran are heartless and blind. There are many who support him and many who don't. Either way, they don't have the power to influence him. Is it then justifiable to punish ordinary civilians? Is it fair to kill Americans for the sin that Bush committed in Iraq, even though they not only elected, but re-elected him? The Sri Lankan army cannot be faulted for trying to destroy the LTTE. But the Sri Lankan government cannot condone or justify destroying Tamils and their homeland in the process.

But this only strengthens Prabhakaran. Politicians and bureaucrats don't realise that the LTTE welcomes war. It swells its ranks, reaffirms its raison d'étre, it produces more emotional support for a separate state. From the previous wars that I have witnessed (journalists could manage to get in then), LTTE cadres love fighting. During peacetime, LTTE guerrillas are disciplined and restrained. In battle, there is a complete makeover. They are highly excitable, almost gleeful.

The LTTE has been written off many times before. Prabhakaran has been 'killed' or 'nearly killed' many times in the past. If the army ever reaches his bunker, he will swallow his cyanide and the legend of Prabhakaran will probably attain mythical proportions. Lacking independent assessments, journalists repeat Sri Lankan claims that this is the end game, this is Prabhakaran's last stand.

Judging from the past, I doubt it. Sure, the Sri Lankan army will wrest the last piece of land from Prabhakaran's grip. But that doesn't mean the end of the LTTE. They will revert to what they are best at-guerrilla warfare, striking when least expected. As armies before have realised, conquering territory is one thing, holding onto it opens a Pandora's box of problems.

Prabhakaran has lost wars before. He had created a de facto Tamil Eelam with its own army, police, courts and taxation system not once, but several times in the past-only to have it all smashed and wiped out. And he had to start all over again. At 54, Prabhakaran still has enough grit to start again and continue for another 20 years.

In the meantime, he will be watching the Indian elections closely to see which dispensation takes charge in New Delhi. He will be watching to see if there is a popular upsurge of support in Tamil Nadu for the plight of Tamils across the Palk Strait. He will be watching the disastrous impact of war on Sri Lanka's economy. He will be watching Hillary Clinton who said there should be a 'nuanced' approach to dealing with terrorism. He will be watching President Barack Obama who rightly analysed that conflicts stem from our perception of 'the other'.

Today, Prabhakaran's situation looks dire. But the wheels of fortune are not static. Things change. America has changed. The world is changing. Capitalism is discredited. Socialism sneaks in from the backdoor. Big banks have gone bust. Misery replaces prosperity in headlines. As new winds blow away many certitudes of the recent past, new opportunities, alignments and paradigms take their place on the world stage. And they will inexorably weave their impact in remote corners of faraway Sri Lanka, this beautiful emerald teardrop island that awaits its tryst with peace.

Saturday, April 25, 2009

முள்ளிவாய்க்காலில் இன்று மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 174 பொதுமக்கள் படுகொலை;212 பேர் படுகாயம்

விமல்காந்த், சென்னை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சிறிலங்கா வான்படை மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 174 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 212 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எவ்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின.
சிறிலங்கா வான்படையினரால் சுமார் 20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகள் வீசப்பட்டன.
இத்தாக்குதலில் மக்களின் 18 கூடாரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் ஆழிப்பேரலை மீளமைப்பின் போது கட்டிக்கொடுக்கப்பட்ட 6 வீடுகளும் முற்றாக அழிந்துள்ளன.
இத்தாக்குதலில் 126 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 134-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனா்.
கொல்லப்பட்டவர்களில் அதிகமானோர் காப்பகழிகள் பல மூடப்பட்டதனால் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் மீண்டும் சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன்போது 20 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 4:00 மணியளவில் 12 குண்டுகளையும் 4:50 மணிக்கு 8 குண்டுகளையும் வீசியுள்ளன.
இக்குண்டுத்தாக்குதலில் 48 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 78 பேர் படுகாயமடைந்துள்ளனர்.





Tuesday, April 21, 2009

விடுதலைப்புலிகள் ஒருபோதும் சரணடையமாட்டார்கள், சர்வதேசம் தலையிட்டு நிரந்தர யுத்தநிறுத்தத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - சர்வதேச ஊடகதிற்கு பேட்டி


தமிழீழ விடுதலைப்புலிகள் ஒருபோதும் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடையமாட்டார்கள், அப்படி ஒருசூழ்நிலை வந்துவிடவில்லை, விடுதலைப்புலிகள் தற்போதும் முழுநம்பிக்கையுடனும் தைரியத்துடனுமே போராடிவருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலக பொறுப்பாளர் புலித்தேவன் ரொய்டசுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
அவர் அந்த நேர்காணலில், சிறிலங்கா இராணுவத்தினால் ஒருபோதும் விடுதலைப் புலிகளை ஒழித்தவிடமுடியாது எனவும், விடுதலைப் புலிகள் முழு உறுதியுடனும், முழு பலத்துடனும் போராடுவார்கள் எனவும். ஒருபோதும் அவர்கள் சரணடையப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தற்போது பொதுமக்கள் பலரும் விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களுக்கு உதவியாக இருந்து வருவதாகவும், இந்த நிலையில், மக்களுடன் இணைந்து விடுதலைப் புலிகள் இந்தப்போராட்டத்தில் நிற்சயம் வெற்றி பெறுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் எம்முடனேயே இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகளை தயார்ப்படுத்திவருவதாகவும், மக்களும் இந்த நிலையில் தமக்கு பெரும் பங்களிப்பினை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் தடை செய்யப்பட்ட குண்டுகளை சிறி லங்கா இராணுவத்தினர் தமிழ்மக்கள்மீது வீசி அவர்களை கொன்றுவருவதாகவும் அவர் குற்றம் சாட்டிள்ளார்.
மனிதப்பேரவலம் ஒன்றைதமிழ் மக்கள் மீது சிறிலங்கா இராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள புலித்தேவன் சர்வதேச சமுகம் தலையிட்டு நிரந்தர யுத்தம் நிறுத்தம் ஒன்றை வலியுறுத்தி இங்கு இரத்த ஆறு ஓடுவதை தடுக்க இதுவே சந்தர்ப்பம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் விடுதலைக்காப் போராடிவரும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒருபோதும் அவர்களை கொலை செய்ததாக சரித்திரம் இல்லை எனத் தெரிவித்துள்ள புலித்தேவன். மக்கள் தங்கள் கடும் துயரங்களுக்கும் அவலங்ககளுக்கும் மத்தியல் தமக்கு முழுமையான ஆதரவாகவே உள்ளதாகவும்.
நேற்று திங்கட்கிழமை மட்டும் சிறிலங்கா இராணுவத்தினரின் தொடர்ச்சியான ஷெல் தாக்குதலில் 1000 ற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்துள்ளதுடன் 3000 வரையான மக்கள் காயமடைநதுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பொதுமக்களை தாம் பலவந்தமாக ஒருபோதும் தடுத்துவைக்கவில்லை எனத்தெரிவித்துள்ள சமாதான செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன், சிறி லங்கா அரசாங்கம் சர்வதேச சமுதாயத்தை ஏமாற்ற அப்படி ஒரு புனைகதையினை சொல்லி வருவதாகவும், மக்கள் நாளார்ந்தம் படையினரின் மிலேச்சங்களை கண்டு பயந்தவர்களாக இருப்பதாகவும். அவர்கள் இந்த இடத்தில் சுயவிருப்பிலேயே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தம்முடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அதேவேளை சிறுவர்கள் யாரும் தமது படையணிகளில் இல்லை எனவும், தெரிவித்துள்ள புலித்தேவன். இனியும் காலம் தாமதிக்காமல் அப்பாவி தமிழ் மக்களின் மனிதப்பேரவலத்தை துடைக்க சர்வதேச சமுகம் இந்த விடயத்தில் தலையிட்டு நிரந்தரமான ஒரு யுத்த நிறுத்தத்திற்கு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Nadesan denies reports of human bomb, blames Colombo for deploying banned weapons


[TamilNet, Monday, 20 April 2009, 17:06 GMT]Political Head of the LTTE, B Nadesan categorically denied reports in Sri Lankan and the Indian media that Tamil Tiger human bombs blew themselves up to prevent civilians fleeing the so-called safe-zone. "The LTTE denies these fabricated stories that seek to discredit us and divert attention away from the suffering of the Tamil people," he said when contacted by TamilNet Monday night. Sri Lankan forces have deployed three types of internationally banned weapons such as cluster shells, napalm bombs and phosphorus bombs against civilians, causing heavy casualties among civilians. He said nearly one thousand civilians were killed and many more wounded in SLA attacks. So far around 1,200 have been brought to the makeshift hospital in Mu'l'li-vaaykkaal, Mr. Nadesan said.Several people were killed inside their tarpaulin huts and the rescue workers have not even been able to transport their bodies, he added.Reports surfaced in Sri Lankan and Indian media Monday that three LTTE human bombs were exploded to prevent civilians who were fleeing the so-called safe zone. Thousands of civilians, injured in the bombing, are flocking the temporary hospital at Mu'l'li-vaaykkaal.Independent sources, such as civilians and doctors, talking to media have attested that cluster bombs had caused heavy casualties in Monday's attack.

Sunday, April 19, 2009

'Regular rapes, killings, degrading interrogations in internment camps'


Tamil IDPs inside the barbed-wire internment camps in Sri Lanka Army (SLA) controlled Vavuniyaa are not only medically underserved, but are subjected to degrading interrogations and there are reports of regular rapes and killings, reveals a well known German writer and Human Rights activist, Thomas Seibert, who recently returned from Sri Lanka after a humanitarian trip, conducting personal interviews that described the plight of civilians kept as near-prisoners under the SLA occupation.

Thomas Seibert
Tens of thousands of people who flee from the battle field have been identified and housed by the Sri Lanka Army and its paramilitaries in several camps located around Vavuniyaa. "Many are tortured or simply shot. There are also reports of regular rapes," Medico International quoted Thomas Seibert in a press statement.Mr. Seibert said that the Sri Lankan military was attempting to expand the scope of the current internment camps to house the civilians there for years. Meanwhlie, more than 100,000 civilians remaining within a 15 square kilometre coastal strip in Vanni, according to the estimated figures by the UN and Sri Lankan Humanitarian organisations, are under siege and subjected to shelling, Seibert further said.He warned of a tendency for massacre unless an immediate ceasefire is declared. "Should the lives of the civilians be saved at least, an immediate cease fire must be declared. Every thing else is an acceptance of a foreseeable massacre."Frankfurt-based relief and human rights organisation Medico International is a Non-Governmental Organization, which provides emergency relief and supports human rights and development projects to secure access to health care.Press statement in German issued by Medico International follows:Pressemitteilung, 16.04.2009

'பாதுகாப்பு வலயம்' மீது நள்ளிரவில் இருந்து இன்றிரவு வரை சிறிலங்கா படையினர் தாக்குதல்: 310 தமிழர்கள் படுகொலை; 542 பேர் காயம்

விமல்காந்த், சென்னை.

Tuesday, April 14, 2009

ஒரு வேளை கஞ்சிக்கு காத்து இருக்கும் எம் தமிழ் உறவுகள்.

விமல்காந்த், சென்னை.

ஒரு வேளை கஞ்சிக்காக காத்து இருக்கும் கொடுமை. தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழ்ஈழ நிர்வாக துறையினரால் கஞ்சி வழங்கப்பட்டது. பாதுகாப்பு வளையத்தில் கடும் ஷெல் விச்சுகளுக்கு நடுவில் உணவு இன்றி நீர் இன்றி வாடும் மக்கள் உணவு பொருட்களை உலகில் எங்கும் இல்லாத விலை கொடுத்து வாங்க முடியாமல் கஞ்சியுடன் தங்களுக்கான உணவை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர் .


Monday, April 13, 2009

2 days cease fire period- in words not in action. Action continues against tamils. Killed 287 and injured 346. (Monday)

Vimalkanth, Chennai.

Cheating the world and India gives false propaganda on ceasefire. NO CEASEFIRE WAS PUT IN FORCE. OFFENSIVE STILL ON AGAINST TAMILS AND KILLED 287 AND INJURED SEVERLY 346.

The ongoing shelling doesnt stops its action as the president of Srilanka announced a 2 day ceasefire for the tamil and singhala new year period. The very next day his brother gotabaya rajapakse to media there is no stop in offensive against the tamils. No ceasefire will be considered and the chief army staff also disagreed to go for ceasefire.

Sunday, April 12, 2009

தொடர்கிறது தமிழ் இன படுகொலை- பாதுகாப்பு வலயம்' மீது படையினர் அகோர தாக்குதல்: இன்று (ஞாயிறு) 294 பொதுமக்கள் பலி; 432 பேர் படுகாயம்

சொல்வதற்கு வார்தைகள் இல்லை. படங்கள் மட்டும்.

சிந்தியுங்கள் நம் குழந்தைகளுக்கு இவ்வாறு ஏற்பட்டால்?..............

வாக்குகளை யோசித்து காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியை விரட்டி அடிப்போம்.

தமிழ் இன விரோதிகளை வேரறுப்போம். தமிழ் இனத்தை காப்போம்.

வெல்க தமிழ். வெல்க புலிகள் படை.






விமல்காந்த், சென்னை.

Plight of a unborn baby

SLA Heavy Shelling attacks a pregnant women and baby hand had come out.
A 20-days old baby succumbed to injuries of Sri Lanka Army (SLA) shelling on Sunday in the makeshift hospital at Puthumaaththa'lan within the safety zone. A pregnant mother whose abdomen was torn open and in the condition of the hand of the foetus coming out was admitted to the hospital on Sunday, after the SLA shelling.




Vimalkanth

பிரித்தானியாவில் வரலாறு காணாதா பேரணி: இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர்.

விமல்காந்த், சென்னை.
பிரித்தானியாவில் வதியும் தமிழ் மக்களின் மூன்றில் இரண்டிற்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் இலண்டன் வீதிகளின் ஊடாக அணிவகுத்து உடனடி யுத்த நிறுத்தத்திற்கு வலியுறுத்தியும் தமிழீழத்தை அங்கீகரிக்க கோரியும் மாபெரும் ஆர்பாட்ட பேரணியை நடாத்தியுள்ளனர்



இலண்டன் தமிழ் இளையோர்களாலும், மாணவர்களாலும் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ் ஆர்பாட்ட பேரணியும் பெருமளவு பெண்கள் , குழந்தைகள், முதியவர்கள் என இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது
இலண்டன் எம்பார்க்மன்ட் என்ற பகுதியில் மதியம் ஒரு மணிக்கு ஆரம்பித்த பேரணி சுமார் இருமணித்தியாலங்களில் ஹட்பாக்க கோணரை சென்றடைந்தது. அங்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரித்தானிய தமிழ் பேரவை உறுப்பினர், தமிழ் இளையோர் அமைப்பினர் என பலர் உரையாற்றியிருந்தனர்

இப்பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள்:

"எமது தேவை தமிழீழமே!"

"போர் நிறுத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்து!"

"சிறிலங்கா அரசுக்கான உதவிகளை உடன் நிறுத்த வேண்டும்"

"பிரபாகரனே எங்கள் தலைவன்"

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மருந்து மற்றும் உணவுப்பொருட்கள் சென்றடைய வேண்டும்"

" பிரித்தானிய அரசே புலிகள் மீதான தடையை நீக்கு"

" புலிகளே தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள்"

"பொதுநலவாய நாடுகளில் இருந்து சிறிலங்காவை உடனடியாக நீக்கு"

"புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல; அவர்கள் ஒரு விடுதலை இயக்கம்"

"உலக வங்கியே சிறிலங்காவுக்கு பண உதவி செய்யாதே!"

"பிரித்தானியாவே சிறிலங்கா பொருட்களை வாங்கி, உன் கைகளில் இரத்தத்தை வாங்காதே!"

என கோசங்களை எழுப்பியவாறு சென்றனர்