Thursday, May 14, 2009

அரச கட்டுபாட்டில் வரும் மக்களின் நிலை




விமல்காந்த்




பொலநறுவையில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை


பொலநறுவை மாவட்டம் குருநாகல் பகுதியில் மாபெரும் குளிரூட்டப்பட்ட பிரேத அறை ஒன்று இருப்பதாக நேரில் பார்த்த பாதிரியார் ஒருவர் தெரிவித்துள்ளார்.


இங்கு வவுனியா, புதுக்குடியிருப்பு மற்றும் கிளிநொச்சியில் கைதாகி காணமற்போகும் இளைஞர்களை கொண்று அவர்களின் உடல் உறுப்புக்களை எடுக்கப்பட்ட பின்னர் குளிரூட்டப்பட்ட செயற்கை சவச்சாலை அறைக்கு அனுப்பப்படுவதாக தெரிவித்த பாதிரியார், அவை பின்னர் மலையகம் செல்லும் பார ஊர்திகளில் ஏற்றப்படுவதாகவும், மலையக்த்தில் உள்ள சிங்கள கிராமங்களில் அவ் உடல்கள் புதைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்


சிங்கள இராணுவ உயர் அதிகாரி ஒருவரின் பிள்ளைக்கு ஞானஸ்தானம் செய்யச் சென்ற பாதிரியார் அங்கு நின்ற வேளை அவ் உயர் அதிகாரியின் உறவினர் ஒருவர் பாம்புக்கடிக்கு உள்ளானதால் ஏற்பட்ட பரபரப்பில் உயர் அதிகாரி அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டதாகவும், அதனால் அயல் அட்டையில் நடந்த இக் கொடூரக் காட்சிகளை அவர் தற்செயலாக பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு தின்பண்டம் கொண்டுவந்த அதிகாரியின் சீருடையில் இரத்தக்கறை காணப்பட்டதையடுத்து, சந்தேகமடைந்த அவர் மறைந்திருந்து பலவிடயங்களை பார்த்ததாகவும் வாசலில் இருந்த உடலங்களை தமது கையடக்க தொலைபேசியில் புகைப்படம் எடுத்ததாகவும் கூறியுள்ளார்.


Monday, May 11, 2009

அனைத்துலக சமூகம் தவறிவிட்டதால் 10 ஆயிரம் பேர் 5 மாதத்தில் படுகொலை: தமிழர் புனர்வாழ்வுக் கழகம் குற்றச்சாட்டு


விமல்காந்த், சென்னை.


வன்னியில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு அனைத்துலக சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தவறிவிட்டதால் கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் 10 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டும் 20 ஆயிரம் தமிழர்கள் காயமடைந்தும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழக கள அலுவலக தலைமை அதிகாரி லோறன்ஸ் கிறிஸ்ரி, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கு 'பாதுகாப்பதற்கான பொறுப்பு' (R2P) என்ற கோட்பாட்டைப் பயன்படுத்துமாறும் கோரியிருக்கின்றார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சுமார் 1,30,000 மக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் 'பாதுகாப்பு வலயம்' என வரையறுக்கப்பட்டுள்ள பகுதி மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியான வான் குண்டுத்தாக்குதலையும் பலமான எறிகணைத் தாக்குதல்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள். நாள் முழுவதும் தொடர்ந்த இந்தத் தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர்.
கனரக ஆயுதப் பாவனை இரண்டு வார காலத்துக்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்த போதிலும், நேற்றும் தொடர்ச்சியாக இந்த வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 3 ஆயிரத்து 200 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் தடைகளால் இப்பகுதியில் போதிய மருத்துவ வசதிகளோ, மருந்துகளோ அல்லது மருத்துவப் பணியாளர்களோ இல்லாமையால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஊடகங்களில் தெரிவிக்கப்படும் எண்ணிக்கையைவிட பல மடங்கு அதிகமானவர்களே இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
தற்காலிக மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழக களப் பணியாளர்களின் தகவல்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இந்த எண்ணிக்கை வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், தாக்குதலின் போது கொல்லப்பட்ட பலர் கடற்கரை மணலால் மூடப்பட்டுவிட்டனர்.
பெருந்தொகையானவர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதால் அவர்களை மீட்கும் பணியில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது. உடனடியாக இந்தப் பகுதிக்கு உணவு மற்றும் மருந்துகளை அனுப்பிவைக்குமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொள்கின்றோம்.
அதேவேளையில், இப்பகுதியில் பாரியளவிலான படுகொகைள் இடம்பெறுவதால் அனைத்துலக சமூகம் கண்காணிப்புக் குழு ஒன்றையும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த இனப்படுகொலையைத் தடுப்பதற்கு உலகம் உடனடியாகத் தலையிட வேண்டும்" என லோறன்ஸ் கிறிஸ்ரி அனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேவேளையில், நேற்று இடம்பெற்ற மூர்க்கத்தனமான தாக்குதல்களில் படுகாயமடைந்து முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு 24 மணிநேரம் கடந்த நிலையில் கூட சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்திருக்கின்றார்.
பெரும் தொகையான காயமடைந்தவர்கள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் மருத்துவப் பணியாளர்கள் பலர் பணிக்கு வராமையாலுமே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது.
மருத்துவப் பணியாளர்களில் குடியிருப்புக்கள் பல தாக்குதலுக்குள்ளாகியிருப்பதால் அவர்களில் 50 வீதமானவர்கள் கடமைக்குச் சமூகமளிக்க முடியாத நிலையிலிருப்பதாகவும் மருத்துவர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

India gave military help to fight LTTE- Ranil


விமல்காந்த். சென்னை


Sri Lanka's former Prime Minister Ranil Wickremesinghe speaking exclusively to 'Times Now' said that India has actively helped the Sri Lankan army in its fight against the LTTE. In the interview Wickremesinghe admits India has played a key role in decimating the LTTE from its strongholds.
Wickremesinghe commenting on the role of India and western countries in the fight against the LTTE said: In the security sphere India and the developed countries gave us assistance from the time I was Prime Minister. Earlier there were embargoes, but with the peace process they agreed to come in with security co-operation. For instance, the interdiction of LTTE ships on the sea would not have been possible without the help of India, US and some other countries. The LTTE network abroad was also broken up. Speaking on other countries helping in trading, intelligence co-operation with the Sri Lankan armed forces, he said, That is also on. We arranged it and also got it expanded. There has been training. There has been intelligence co-operation, exchange of views and India also provided a raid of our defence in Sri Lanka. This revelation by Wickremesinghe is bound to embarrass the UPA government and its ally DMK Karunanidhi who are battling hard against the state wide protest on UPA government for supporting the war on Tamils. Many pro Eelam Tamil groups and film personalities have vowed to root congress from Tamil Nadu with this election.


Sunday, May 10, 2009

இன படுகொலை..... சில படங்களே இணைக்கப்பட்டு உள்ளது














































விமல்காந்த், சென்னை.


















இன படுகொலை . நெஞ்சில் இடி விழுகிறது.

Friday, May 8, 2009

Sri Lanka : A Paradise turned into Kingdom of Vultures!

Vimalkanth

Srilanka is the place were the ethnic conflict is going in the name of war on terror. A perfect Genocide is happening, were 7 crore tamils are living nearly 40 km away from Tamilnadu. Here british leading news magazine reveals the truth in the island.

Pls click the link to read the article.

http://my.telegraph.co.uk/chandradavid/blog/2009/05/04/a_paradise_turned_into_kingdom_of_vultures

Wednesday, May 6, 2009

34வது ஆண்டில் நுழையும் விடுதலை புலிகள் இயக்கம்


Vimalkanth


இதுவரை இல்லாத அளவிலான மிகப் பெரிய சிக்கலுக்கு மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கம் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.உலகில் தோன்றிய போராளி இயக்கங்களுக்கு மத்தியில் தனித்துவத்துடன் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம். வேறு எந்த போராளி இயக்கத்திடமும் இல்லாத அளவுக்கு சகல படை பலத்துடன் திகழ்ந்தவர்கள் புலிகள்.கடற்படை, விமானப்படை, தற்கொலைப் படை, மகளிர் படை என பலவிதமான படைப் பிரிவுகளுடன் ஒரு ராணுவத்தைப் போன்று செயல்பட்டு வந்தவர்கள் விடுதலைப் புலிகள். உலகில் வேறு எந்த அமைப்பிடமும் இப்படிப்பட்ட படை பலம் இருந்ததில்லை.1972ம் ஆண்டு தமிழ் புதிய புலிகள் என்ற அமைப்பை உருவாக்கினார் பிரபாகரன். பெரும்பான்மைச் சிங்களர்களின் ஆதிக்க போக்கை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அது.1975ம் ஆண்டு யாழ்ப்பாணம் நகர மேயர் ஆல்பிரட் துரையப்பாவை நேருக்கு நேராக நின்று சுட்டுக் கொன்றார் பிரபாகரன். இதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல் கொலை.பொன்னாலையில் உள்ள இந்துக் கோவிலுக்குள் நுழைய முயன்றபோது மேயர் ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் சுட்டுக் கொன்றார்.யாழ் வளைகுடாவில் எழுந்த தமிழ் தேசிய உணர்வுகளை முறியடிக்க முயன்றார், சிங்கள கட்சியான இலங்கை சுதந்திரா கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற காரணத்திற்காக துரையப்பா சுட்டுக் கொல்லப்பட்டார்.அதன் பின்னர் விடுதலைப் புலிகள் வேகமாக வளர ஆரம்பித்தனர். 1976ம் ஆண்டு மே 5ம் தேதி தனது அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.இ.) என மாற்றினார் பிரபாகரன்.1976ம் ஆண்டு தொடங்கிய புலிகளின் வேக நடை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்தது. மிகப் பெரிய போராளி இயக்கமாக மாறியது. தங்களது கொரில்லா முறைத் தாக்குதலால் இலங்கைப் படைகளையும், அரசையும் திணறடித்து, சிதறடித்தனர் புலிகள்.இலங்கை அரசியல் தலைவர்கள் கொழும்பை விட்டு வெளியேறவே முடியாத அளவுக்கு நிலைமை போனது.புலிகளுக்கு கடந்த காலங்களில் இந்திய அரசில் பங்கேற்று வந்த பல்வேறு தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். நிதியுதவியும், ஆயுத உதவிகளும், பயிற்சி உதவிகளும் புலிகளுக்குத் தாராளமாக கிடைத்தன. ஏராளமான வெளிநாடுகளிலிருந்தும் புலிகளுக்கு நிதியும், ஆயுதமும், பயிற்சிகளும் தடையின்றி கிடைத்தன.புலிகளின் சர்வதேசப் பிரிவு அலுவலகங்கள் லண்டன், பாரீஸில் இருந்தன.விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேருபவர்களுக்கு மிகக் கடுமையான ராணுவப் பயிற்சி அளிக்கப்படும். தேர்ந்த ராணுவ வீரருக்குரிய தரமான பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.பயிற்சி முடித்து வெளியே வரும் ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் கையில் சயனைடு குப்பி தரப்படும். அதை கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும். எதிரிகளிடம் சிக்கினால் உடனடியாக குப்பியைக் கடித்து உயிர் துறப்பார்கள் புலிகள்.விடுதலைப் புலிகளிடம் சகலவிதமான ஆயுதங்களும் இருந்தன. பீரங்கிப் படை, நிலத்திலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர்கள் என பக்கா ராணுவ பலத்துடன் திகழ்ந்தார்கள் புலிகள்.ஆரம்பத்தில் விடுதலைப் புலிகள் தவிர வேறு சில போராளி அமைப்புகளும் இருந்தன. தமிழ் ஈழ விடுதலைக் கழகம் (டெலோ), ஈழம் புரட்சிகர மாணவர் கழகம் (ஈராஸ்), தமிழ் ஈழ மக்கள்புரட்சி முன்னணி (இபிஆர்எல்எப்) ஆகிய அந்த அமைப்புகளுடன் இணைந்து 1984ம் ஆண்டு பிரபாகரன், ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.இதில் டெலோ இந்திய அரசுக்கு சாதகமாக செயல்பட்டது. இந்தியாவின் முயற்சியால் இலங்கை அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்திய அரசுக்கு சாதகமாக டெலோ நடந்து கொண்டது. இது பிரபாகரனுக்குப் பிடிக்கவில்லை.இதையடுத்து 1986ம் ஆண்டு ஈழ தேசிய விடுதலை முன்னணியிலிருந்து வெளியேறினார் பிரபாகரன். மேலும், பிற போராளி அமைப்புகள் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் இணைய வேண்டும் என உத்தரவிட்டார். இதை ஏற்காமல் டெலோ இயக்கத்தினர் விடுதலைப் புலிகளுடன் மோதினர். இந்த மோதலில் விடுதலைப் புலிகள் வென்றனர். டெலோ இயக்கம் அழிக்கப்பட்டது. அதில் இருந்த வீரர்கள் பலர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தனர்.அதேபோல பிற இயக்கங்களும் கூட அழிக்கப்பட்டு விட்டன. இறுதியில் தனிப் பெரும் இயக்கமாக மாறியது விடுதலைப் புலிகள் இயக்கம். யாழ் குடா முழுவதும் புலிகள் வசம் வந்தது.1987ம் ஆண்டு கரும்புலிகள் எனப்படும் தற்கொலைப் படைப் பிரிவை உருவாக்கினார் பிரபாகரன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலைப் படைத் தாக்குதல் உலக அளவில் பயங்கரமானது. இந்த அமைப்பின் முதல் தாக்குதலில் இலங்கை ராணுவ முகாம் ஒன்று தகர்க்கப்பட்டு 40 வீரர்கள் பலியானார்கள். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலைப் படைத் தாக்குதல் நுட்பத்தை தெரிந்து கொண்டுதான், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கமும் இதேபோன்ற தாக்குதலில் இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படியாக வளர்ந்து வந்த விடுதலைப் புலிகள், இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய சோதனைக்கு மத்தியில் 34வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளனர். இதுவரை வைத்திருந்த மிகப் பெரிய பரப்பளவு பூமியை அவர்கள் இழந்து நிற்கின்றனர். வெறும் 4 சதுர கிலோமீட்டருக்குள் புலிகள் இன்று முடக்கப்பட்டுள்ளனர்.இலங்கை அரசுக்கும், அந்நாட்டு மக்களுக்கும், ராணுவத்திற்கும் சிம்ம சொப்பனமாக விளங்கி வந்த பிரபாகரன் இன்று மிகக் குறுகிய இடத்திற்குள் முடக்கப்பட்டுள்ளார்.இருப்பினும் கூட இலங்கை ராணுவமும், அந்நாட்டு அதிகாரிகளும், அமைச்சர்களும் கூறுவதைப் போல இப்போதும் கூட விடுதலைப் புலிகள் தைரியமாக போரிட்டு வருகின்றனர். அவர்களிடம் உறுதித் தன்மை இருக்கிறது, ஆயுதங்களும் கை நிறைய இருக்கிறது என்பதில் உண்மை உள்ளது.மிகச் சிறிய பரப்பளவுக்குள் முடக்கப்பட்ட நிலையிலும் கூட, அந்த இடத்திற்குள் கூட இலங்கை ராணுவத்தால் வேகமாக முன்னேற முடியாத அளவுக்கு புலிகளின் எதிர்த் தாக்குதல் வேகமாகவே இருப்பதாகவே நினைக்க வேண்டியிருக்கிறது.புலிகளால் இனியும் பாரம்பரிய சண்டையில் ஈடுபட முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களின் ஸ்பெஷல் தாக்குதல் ஆயுதமான கொரில்லா போர் முறையில் இன்னும் அவர்கள் வீழவில்லை. எனவே கொரில்லா போர் தாக்குதல் வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் என கருதப்படுகிறது.தற்போது ஆயிரக்கணக்கான மக்களுக்கு மத்தியில் பிரபாகரனும், அவரது தளபதிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறிய இடத்தைப் பிடிக்க ராணுவம் நிதானமாக முன்னேறி வருகிறது. இங்கு மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதால் தாக்குதல் நடத்தினால் மிகப் பெரிய உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் இலங்கை நிதானிக்கிறது.இருப்பினும் இதைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான நாசகார ஆயுதங்களை வைத்து ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களையே அழித்து விடும் திட்டத்திலும் இலங்கை அரசு உள்ளது.ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், குறிப்பாக தமிழகத்தில் கொந்தளிப்பான நிலை இருப்பதால் நிதானம் காக்குமாறு இலங்கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது இந்தியா. ஆனால் மே 13ம் தேதிக்குப் பிறகும் கூட இலங்கையை இந்தியா கட்டுப்படுத்தி வைத்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்

தமிழ்நாட்டு மக்கள் மே 13 இல் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள்: நடேசன் வலுவான நம்பிக்கை


Vimalkanth.

தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

தற்போதைய நிலமை தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

உலகின் சில பெரிய சக்திகளின் துணையுடன் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயல்வது, இந்தத் தீவில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்தாது. எமது மக்களின் உரிமைகள் பெறப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.

இப்போது - தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் விரைவுபடுத்தப்பட்ட இன அழிப்பு போருக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற்றி வருவதன் தொடர்ச்சியே இது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சுகவீனம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என வெளியாகும் தகவல்கள் உண்மையா?

இன்றைய போரானது பல மட்டங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழீழ மக்களின் மனிதாபிமான அவலங்களுக்கு இந்திய மக்களிடத்தில் இருக்கும் ஆதரவை மழுங்கடிக்கும் செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. களமுனை தகவல்களை பொறுத்தவரையில் கூட, இராணுவத்தால் பரப்பப்படும் வதந்திகளுக்கு சில ஊடகங்கள் நம்பகத்தன்மையை ஊட்ட முனைகின்றன.

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் ?

வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் - ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் - இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவுசெய்யும் ஒரு மாற்றத்தை இந்த தேர்தல் கொண்டுவரும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை.

தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது, ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான். ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் - தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான உங்களின் பார்வை என்ன?

ஏப்ரல் 27 ஆம் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை சிறிலங்கா இராணுவம் 5,000-க்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகளை மக்கள் வாழும் 'பாதுகாப்பு வலய' பகுதி மீது வீசித் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆகவே, இது தொடர்பில் நான் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை.

தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

Sunday, May 3, 2009

சிறிலங்கா பாரிய அழிப்புத் தாக்குதலுக்கு தயாராகின்றது - இரசாயணத் தாக்குதலுக்கு முன்னேற்பாடு


Vimalkanth


கடந்த சில நாட்காளாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா பெருமெடுப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பல விடுதலைப் புலிகளால் முறியிடிக்கப்பட்டுள்ளன.

கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட தரையிறக்க முயற்சியும் கைகூடாத நிலையில், பாரிய அழிவுத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுவிட்டு, அப்பகுதிக்குள் நுழைவதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையில் சிறிலங்காப் படையினர் இறங்கியுள்ளதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கைக்காக பெருமளவு வெடி பொருட்கள் களமுனையின் முன்னணிக்கு நகர்த்தப்பட்டுள்ள அதேவேளை, இரசாயணத் தாக்குதலுக்கு தேவையான 200 பாதுகாப்பு முகமூடிகளும் சிறிலங்காவின் 59வது படையணி நிலைகொண்டுள்ள முல்லைத்தீவின் வட்டுவாகல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த காலங்களிலும் இவ்வாறான சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணாக தமிழ் மக்கள் மீது இரசாயணத் தாக்குதல்களை சிறிலங்கா நடத்தியிருந்ததற்கான ஆதாரங்கள் பல உள்ளன.

இதேவேளை, தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பாவிப்பதில்லை எனக் கூறிவரும் சிறிலங்கா, தொடர்ச்சியாக கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று பாதுகாப்பு பகுதியில் செயற்பட்ட மருத்துவமனை மீது நடத்திய எறிகணைத் தாக்குதலில் அங்கு சிகிச்சைபெற்று வந்த 64 பேர் கொல்லப்பட்டதுடன், காயமடைந்திருந்தவர்கள் உட்பட 87 பேர் கடும் காயங்களுக்கு உள்ளானார்கள்.

இந்நிலையில், மீண்டும் பாரிய இராணுவ நகர்வொன்றை மேற்கொள்வதற்கு தயாராகியுள்ள சிறிலங்கா இராணுவம், இம்முறை பெரும் அழிவை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய இரசாயண ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக தெரியவருகின்றது. அவ்வாறான ஒரு தாக்குதலை மேற்கொண்டால், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தஞ்சமடைந்துள்ள ஒரு இலட்சத்து 60 ஆயிரம் வரையான மக்கள் பெரும் அழிவொன்றினை சந்திக்க நேரிடும் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக அறிவித்த போர் நிறுத்தத்தை நிராகரித்த சிறிலங்கா, சர்வதேச நாடுகள் விடுத்த வேண்டுகோள்களையும் நிராகரித்து பெரும் அழிப்புத் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Saturday, May 2, 2009

மனித உயிர்களைக் காக்க 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று போரை நிறுத்துங்கள்: உலக சமூகத்திடம் பா.நடேசன் வேண்டுகோள்


Vimalkanth
"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அனைத்துலக ஊடகமான 'அசோசியட் பிறஸ்' நிறுவனத்தின் கொழும்பு செய்திப் பீட தலைமையாளர் ரவி நெஸ்மன் மேலும் எழுதியிருப்பதாவது:

"நாங்கள் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை; அதனால், அனைத்துலக சமூகம் இந்த கொடுமையான போரை நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்துள்ளார்.

போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போடும் இராஜதந்திர அழுத்தங்களை எல்லாம் சிறிலங்கா அரசு புறம் தள்ளிவருகின்றது.

"எந்த நாடுகளுக்காவது இங்கு வாழும் மக்கள் மீது அக்கறை இருக்குமானால், மனித உயிர்களைக் காப்பதற்காக, அந்த நாடுகள் தமது 'இராஜதந்திர வரம்புகளை' கடந்து சென்று சிறிலங்காவின் இன அழிப்புப் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்," என நடேசன் தெரிவித்தார்.

மனிதாபிமான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதல் மற்றும் தொண்டர் அமைப்புக்களின் பணியாளர்களை போர் நடைபெறும் பகுதிக்கு அனுமதித்தல் போன்றவற்றை மேற்கொள்ளும் முகமாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்புக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் நடேசனின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தம் ஒன்றை அறிவித்திருந்தனர். ஆனால் சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளைச் சரணடையக் கோரியிருந்தது.

இதற்கு பதிலளித்த நடேசன், "சரணடைவது மற்றும் ஆயுதங்களைக் கீழே போடுவது என்ற கேள்விகளுக்கே இங்கு இடம் இல்லை. எமது (மக்களின்) நியாயமான அரசியல் உரிமைகளை நாம் பெறும் வரையிலும் எமது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசும், அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக தெரிவித்த கருத்துக்களை மறுத்த நடேசன், "நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தை போன்றவர்கள் யாராவது தமது குடும்ப உறுப்பினர்களையே மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவார்களா?" என கேள்வியும் எழுப்பினார்.

விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினர் நாட்டை விட்டுச் சென்று விட்டார்கள் என்ற கருத்துக்களை மறுத்த நடேசன், தாம் எல்லோரும் நாட்டிலேயே இருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தற்போது சிறிலங்கா அரசின் பகுதியில் உள்ள தயா மாஸ்டர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கேட்டபோது, அந்த கருத்துக்களை நிராகரித்ததுடன், அவர் தமது இயக்கத்தின் "முக்கியமான ஒரு உறுப்பினர் அல்ல" எனவும் நடேசன் தெரிவித்தார்.

கொழும்புக்கு செல்லவிருந்த இந்திய இராணுவ ஆயுத லாரிகளில் 5 லாரிகள் தமிழர்களால் சேதம்



Vimalkanth

ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.
ஈழத்தில் தமிழர்கள் மீதான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர் அரசானது தமிழகம் சேலம் , கோயம்பத்தூர் வழியாக போர் தளவாடங்களை 80 லாரிகளில் அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர்.

தற்பொழுது கோயம்பத்தூரில் பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் அப்போர் தளவாடங்களை கொழும்புக்கு செல்லவிடாமல் தடுக்க கோவை L&T சாலையில் திரளான தமிழுணர்வாளர்கள் குழுமினர்.

அப்பொழுது அவ்வழியில் வந்த 5 லாரிகளை தடுத்து நிறுத்தி உள்ளே இருந்த ராக்கெட் லாஞ்சர் முதலான பல பொருட்களை சாலையில் போட்டு உடைத்து எரித்தனர். லாரி டயர்களின் காற்றினை திறந்துவிட்டு லாரிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி நிருபர்களை இராணுவ வீரர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் கோவை அரசு மருத்துவமன்னையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் இருந்த பொதுமக்களையும் அடித்து விரட்டியுள்ளனர்.

பெரியார் திக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், பெரம்பூர் இலட்சுமணன் மற்றும் மதிமுக வினர் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

DEFEAT CONGRESS AND DMK


Vimalkanth